அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த தொண்டர்கள் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 3 September 2024

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த தொண்டர்கள்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

குடியாத்தம் செப்.3-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அக்கழகத்திலிருந்து விலகி சேவல்  ஏ நித்தியானந்தம் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திமுகவில் இணையும் நிகழ்ச்சி செருவாங்கி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார் மாவட்ட கழக இன செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னிலை வகித்தார் பாஸ்டர் நோவா வரவேற்புரை ஆற்றினார்
இதில் நகரத் துணைச் செயலாளர் ஏ ரவிச்சந்திரன் அமுதா கருணா
இணை செயலாளர் பூங்கொடி மூர்த்தி
மாவட்ட பிரதிநிதி ஜி தேவராஜ் அட்சய வினோத்குமார் தென்றல் குட்டி
மற்றும் அ ம மு க வை சோ்ந்த பாஸ்கர் குடியாத்தம் குமாா் மெடிகல்மோகன் குமார் நஸ்ருதீன் முனிராஜ் தீன தயாளன் நவீன் சங்கீதா கிருஷ்ணவே ஆலிஸ் பிரேமா தேன்மொழி ஷகீல் அஜீஸ்  கந்தன் உள்ளிட்டோர் கழகத்தில் இணைந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad