குடியாத்தம் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
குடியாத்தம் செப்.19-
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
தரணம்பேட்டை பக்ரி முகமது சாய்பு தெரு பகுதியை சேர்ந்தவர் தணிகை மலை (வயது 64) இவர் சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட அவர் வீட்டின் மேற்கூறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தணிகை மாலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் தரணிப்பர்வதம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment