நகராட்சி குடிநீர் பம்ப் ஆப்ரேட்டர் தூக்கிட்டு தற்கொலை பிரோதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 7 September 2024

நகராட்சி குடிநீர் பம்ப் ஆப்ரேட்டர் தூக்கிட்டு தற்கொலை பிரோதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை!

குடியாத்தம் நகராட்சி குடிநீர் பம்ப் ஆப்ரேட்டர் தூக்கிட்டு தற்கொலை பிரோதத்தை கைப்பற்றி குடியாத்தம் போலீசார் விசாரணை

குடியாத்தம் செப்.7-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைன் பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (வயது40) இவர் குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் பம்ப் ஆப்ரேட்டராக பணி புரிந்து வருகிறார்

 கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்

இந்நிலையில் மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதால் மனவிரக்தியில் இருந்து வந்த பாக்கியராஜ் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் 

இது குறித்து குடியாத்தம் போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் பிரோதத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad