மகாத்மா காந்தி 155 வது பிறந்த நாள் மற்றும் காமராஜர் அவர்களின் 49 வது நினைவு நாள் அனுசரிப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 October 2024

மகாத்மா காந்தி 155 வது பிறந்த நாள் மற்றும் காமராஜர் அவர்களின் 49 வது நினைவு நாள் அனுசரிப்பு!

குடியாத்தம் அக்.3-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் 155 வது பிறந்தநாள், மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49 வது நினைவு நாள், மற்றும் முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) சார்பில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பள்ளிக்கொண்டா காந்தி சிலை முதல் பேருந்து நிலையம் வரை மற்றும் அணைக்கட்டு சந்தை மேடு முதல் அம்பேத்கர் சிலைவரையிலும் (02.10.2024) புதன்கிழமை மாலை 4 மணியளவில் தேசிய விழிப்புணர்வு நடைப்பயணம் நடைப்பெற்றது.
நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் G. சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்  கிருஷ்ணவேணி ஜலந்தர், பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா, வேலூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நித்தியானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிகொண்டா பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார். பாதயாத்திரையின் துவக்கத்தில் பள்ளிகொண்டா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து புதிதாக அமைக்கப்பட்ட 3 கொடி கம்பங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியேற்றி தேசிய விழிப்புணர்வு நடைப்பயணம் துவக்கி வைக்கப்பட்டது. நடைப்பயணத்தின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகாத்மா காந்தி அடிகளின் திருவுருவ படம் மேளதாளத்துடன் எடுத்து செல்லப்பட்டது. நிகழ்வில் மாநில பேச்சாளர் நாட்டாம்கார். அப்துல் அக்பர் சிறப்புரை ஆற்றினார். வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், சங்கர், தனசேகரன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் விஜயன் (குடியாத்தம்), முஜம்மில் அஹ்மத் (பேரணாம்பட்டு), மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், முனுசாமி, தேவகிராணி ராஜேந்திரன், பாரத் நவீன்குமார், சரவணன், MD.ராகீப், உவைஸ் அஹ்மத், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய்பாபு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹிர், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் காத்தவராயன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் ஆடிட்டர் ஹரிபாபு, மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பன்னீர்செல்வம், மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி.  ராதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad