தீயணைப்புத்துறை காட்பாடி ரெட்கிராஸ் இணைந்து விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி ஊசூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு!  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 October 2024

தீயணைப்புத்துறை காட்பாடி ரெட்கிராஸ் இணைந்து விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி ஊசூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு! 

தீயணைப்புத்துறை காட்பாடி ரெட்கிராஸ் இணைந்து விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி
ஊசூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு 

காட்பாடி,அக் 26-

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி குறித்து வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையுயின் வேலூர் நிலையம் காட்பாடி ரெட்கிராஸ் கிளையும் இணைந்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் தீக்காயங்களை தவிர்ப்போம் தீக்காயங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து துண்டறிக்களை வழங்கி செயல் விளக்கம் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

       நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.சுதா தலைமை தாங்கினார் இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.   உதவி தலைமை ஆசிரியர்கள் கே.காயத்திரி, எ.கே.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்வில் வேலூர் தீயணைப்பு மீட்பு பணித்துறையின் நிலைய அலுவலர் ஜா.தணிகைவேல், முன்னனி தீயணைப்பு வீரர்கள் க.பார்த்திபன், தீயணைப்பு வீரர்கள் வெ.பரத், த.அரிஷ், உ.குமரப்பா, கா.தினேஷ், யூத் ரெட்கிராஸ் தலைவர் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர்.
       பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட, ஜூனியர் ரெட் கிராஸ் இயக்க, மாணவர் காவல் படை மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி இணை செயல்பாடுகளின் மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பெரியவர்கள் முன்னிலையில் பட்டாசு வெடிப்போம், காலி செருப்பு அணிந்து பட்டாசு வெடிப்போம், பட்டாசு தீக்காயத்தின் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்வோம், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிப்போம், பட்டாசுகளை சட்டை பைகளில் வைத்திருக்க மாட்டோம், கைகளில் பிடித்து பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், தீ விபத்து இல்லா தீபாவளியை கொட்டாடுவோம் என்று உறுதிமொழி எடுத்கக்கொண்டனர்.
       பள்ளி மாணவ மாணவிகள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து துண்டறிக்கைகளை மாணவிகளுக்கு வழங்கி பயிற்சியளித்தனர். இந்த நிகழ்வில் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் என்.கோட்டீஸ்வரி,  மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் பங்கேற்றனர்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad