வேலூர், அக்25-
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி பெறுவதற்கான சிறப்பு முகாம்
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காயிதே மில்லத் கூட்ட அரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான மாவட்ட அளவிலான வயது வரம்பு தளத்தும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முகாமில் துணை ஆட்சியர் கலியமூர்த்தி, இணை இயக்குனர் டாக்டர். பாலச்சந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் உமா, மருத்துவர்கள் மற்றும் துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment