வேலூர் மாவட்டம்
அரிசி லோடு ஏற்றி வந்த கண்டெய்னா் கவிந்து விபத்து
பேரணாம்பட்டு,அக 29-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் மற்றும் உள் வட்டம் பத்திலபல்லி மலைப்பாதையில் இன்று (29.10.2024) மதியம் 11. 45 மணியளவில் கார்நாடகா மாநிலம் டும்குரிலிருந்து KA632694 எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் அரிசி முட்டை சென்னைக்கு எடுத்துசென்றபோது பேர்ணாம்பட்டு வட்டம் பத்தலபல்லி மலை பாதை 2வது வளைவில் விபத்துக்குள்ளானது.
மேற்படி நிகழ்வில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மேலும் ஜேசிபி இயந்திரம் கொண்டு லாரியை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment