வேலூர் மாநகராட்சி 33வது வார்டில் ஓட்டு போட்ட மக்களுக்கு தண்ணீர் காட்டும் திமுக கவுன்சிலர்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 November 2024

வேலூர் மாநகராட்சி 33வது வார்டில் ஓட்டு போட்ட மக்களுக்கு தண்ணீர் காட்டும் திமுக கவுன்சிலர்!

வேலூர் மாநகராட்சி 33 வது வார்டில் ஓட்டு போட்ட மக்களுக்கு தண்ணீர் காட்டும் திமுக கவுன்சிலர்!

வேலூர், நவ.30-

வேலூர் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்டது 33 ஆவது வார்டு பிஷப் டேவிட் நகர். இந்த 33 ஆவது  வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் தவமணி தாமோதரன். இந்த 33 ஆவது வார்டு பிஷப் டேவிட் நகரில் கானாறு கரையோரம் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து அருகில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக மின் மோட்டார் பழுதடைந்தது. இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் நேரில் சந்தித்து தங்களது பகுதியில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவித்தனர் .  அப்படி தெரிவித்தும் உடனடியாக சரி செய்து தருகிறேன் என்று செய்கிறேன் என்று
கவுன் சிலரின் கணவர் தாமோதரன் பொதுமக்களுக்கு பதில் கூறி வந்தார். ஆனால் கடந்த 20 நாட்களை கடந்த நிலையிலும் மின்மோட்டார் பழுது நீக்கி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதி வாழ் பொதுமக்கள் அடித்தட்டு மக்கள் என்பதால் குடி தண்ணீருக்கு மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதாவது தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு ஒரு கவுன்சிலர் தண்ணீர் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திமுக கவுன்சிலர்கள் வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு நன்கு சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கூறிக் கொள்ளும் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் 'ஸ்மார்ட் சிட்டி' என்று மார்தட்டிக் கொண்டு இப்படி தண்ணீருக்கு அல்லாடும் நிலைக்கு வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழும் பொது மக்களை தவிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்த்து வருகிறது என்பது மிகவும் வெட்கக்கேடானது, வேதனைக்குரியது ஆகும். ஆதலால் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் இந்த பிஷப் டேவிட் நகரில் நேரில் கள ஆய்வு செய்து குடி தண்ணீருக்கு எத்தனை குடும்பங்கள் தவிக்கின்றது என்பதை கணக்கில் கொண்டும், கருத்தில் கொண்டும், நினைவில் கொண்டும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் இந்த மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்து தங்களுக்கு ஓட்டு போட்ட பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது இந்த பகுதி வாழ் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad