வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சோதனை அடிப்படையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.
வேலூர் ,நவ 29-
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 30.11.2024-ம் தேதி சனிக்கிழமை முதல், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சோதனை அடிப்படையில்,
போக்குவரத்து மாற்றம்.
I. சத்துவாச்சாரி மற்றும் காட்பாடி, மார்க்கமாக கிரீன் சர்க்கிள் வழியாக பெங்களூர் செல்லும் வாகனங்கள், நேராக செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாற்றாக,
1) பெங்களூர் மார்க்கம் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்க்கலில் இருந்து நேஷனல் சர்க்கிள் சென்று, வலது புறம் திரும்பி, கலைமகள் பெட்ரோல் பங்க் சாலை வழியாக NH சர்விஸ் சாலையை அடைந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.
2) சித்தூர் மார்க்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள், கிரீன் சர்க்களிலிருந்து நேஷனல் சர்க்கிள் சென்று, யூ-டர்ன் எடுத்து மீண்டும் கிரீன் சர்க்கிள் வந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.
II) கிரீன் சர்க்களிலிருந்து சென்னை, சத்துவாச்சாரி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் நகரம் செல்லும் வாகனங்கள், நேராக செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாற்றாக,
1) கிரீன் சர்க்களிலிருந்து செல்லியம்மன் கோயில் சென்று, யூ-டர்ன் எடுத்து மீண்டும் கிரீன் சர்க்கிலள் வந்து, தங்களின் பயணத்தை தொடரலாம்.
30.11.2024-ம் தேதி சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து மாற்றத்திற்கு,
பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, வேலூர் மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment