வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்
வேலூர் , நவ 11-
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (11.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் (Monthly Crime Review Meeting) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம் மற்றும் மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்க குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட வேண்டும் எனவும், மதுவிலக்கு சம்பந்தமாக தீவிரமாக சோதனை மேற்கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் பள்ளி/கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் சோதனையை தீவிரப் படுத்துவதோடு, பள்ளி/கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதைப் பொருட்களினால் ஏற்படும் விளைவுகளை
பற்றி விளக்கி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும்
வாகன தனிக் கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், ஏ.டி.எம். மையங்கள் மற்றும் நகைக் கடைகள் உள்ள பகுதிகளில் CCTV கேமராக்களை அதிகப்படுத்துவதோடு பகல் மற்றும் இரவு ரோந்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், சாலைகளில் முறைகேடாக மற்றும் சாலை விதிகள் மீறி வாகனங்களை இயக்குபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சைபர் க்ரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், SC/ST வழக்குகள் குறித்தும், காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்களுக்கு விரைந்து CSR/FIR பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், மனுதாரர்களிடம் கனிவாக
நடந்து கொள்ள வேண்டும் எனவும், வரும் காலங்களில் குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடைபெறாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், துணை அரசு வழக்கறிஞர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment