அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்!
வேலூர்,நவ.23-
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குண ஐயப்பதுரை, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment