தீயணைப்பு மீட்பு பணிகள் துறையும் காட்பாடி ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து காங்கேயநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி விழிப்புணர்வு
காட்பாடி ,அக் 30 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி குறித்து வேலூர் மாவட்ட பள்ளிகல்வி துறையும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையுயின் காட்பாடி நிலையம் காட்பாடி ரெட்கிராஸ் கிளையும் இணைந்து 30.10.2024 காலை 9.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் தீ காயங்களை தவிர்ப்போம் தீக்காயங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து துண்டறிக்கைகளை பெற்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.சிவக்குமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வி வித்யாலட்சுமி எம் கீதா, இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
இந்த நிகழ்வில் காட்பாடி தீயணைப்பு மீட்பு பணித்துறையின் நிலைய அலுவலர் என்.பாலாஜி சிறப்பு நிலைய அலுவலர் எஸ்.முருகேசன் ஆகியோர் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பது எப்படி என்றும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கும் முறைகளையும் விளக்கி பேசினார்.
தீயணைப்பு வீரர்கள் வி.தீரன், என்.பழனி, எஸ்.பிரகாஷ் பரத் ஆகியோர் கொண்ட குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்
பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட, ஜூனியர் ரெட் கிராஸ் இயக்க, மாணவர் காவல் படை மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி இணை செயல்பாடுகளின் மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்கள் ஏ.ஆனந்தன் ஆர்.சந்தானம் காட்பாடி ரெட் கிராஸ் மேலாண்மை குழு உறுப்பினர்கள் எஸ் ரமேஷ் குமார் ஜெயின் ஏ ஸ்ரீதரன் ஜெயின் பி என் ராமச்சந்திரன், லிவிங்ஸ்டண்மோசஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவிகள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பயிற்சி பெற்றனர். இருபால் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் பங்கேற்றனர். பெரியவர்கள் முன்னிலையில் பட்டாசு வெடிப்போம், பட்டாசு தீ காயத்தின் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்வோம், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிப்போம், பட்டாசுகளை சட்டை பைகளில் வைத்திருக்க மாட்டோம், கைகளில் பிடித்து பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், தீ விபத்து இல்லா தீபாவளியை கொட்டாடு வோம் என்று உறுதிமொழி எடுத்கக்கொண்டனர்.
தீயணைப்பு துறையின் சார்பில் பள்ளி மாணவர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து துண்டறிக்கைகளை வழங்கி பயிற்சியளித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு.பாக்யராஜ்
No comments:
Post a Comment