வேலூர் , டிச 30 -
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது
தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை அலுவலர் சரவணன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment