அறிவியல் கண்ணோட்டத்தை தூண்டும் துளிர் திற னறிதல் தேர்வு
வேலூர் , டிச 7 -
அரசு பள்ளி மாணவிகள் மாணவிகளுக்கான அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வை நடத்தி வருகிறது.
26ஆவது ஆண்டாக இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு 9 மையங்களில் காலை 10:00 மணிக்கு ஆரம்பமானது.
தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் துளிர் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பே.அமுதா தலைமையில் இணை செயலாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்.கோட்டீஸ்வரி செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் துணைத்தலைவர் கே.விசுவநாதன், பொன்.வள்ளுவன், சி.எப்சி, வேலூர் கிளை செயலாளர் முத்து சிலுப்பன், தலைமையாசிரியர் எம்.சினேகலதா, பி.உமாமகேஸ்வரி, தமிழாசிரியர் வாரா, டி.புகழேந்தி, எ.ஷகநாஸ் பாத்தீமா, பி.ஹேமலதா, வி.எ.நஸ்ரின்பானு, செல்வ குமாரி, பிரகாஷ், எஸ்.நிர்மலா உள்ளிட்ட குழுவினர் தேர்வினை மேற் பார்வையிட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் சேர்க் காடு அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் இராம நாயக்கன்பாளையம் அரசு முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி, காங் கேயநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊசூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பேர்ணாம்பட்டு நுஸ்ரத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வ.உ.சி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு பெருமுகை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி சாந்திநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 மையங்களில் 247 மாணவ மாணவிகள் தேர்வினை எழுதினர். இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் கூறியதாவது… வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வழங்கப்பட்டது. நான்கு விடைகளிலிருந்து ஒரு விடையை தேர்வு செய்யும் வகையில் 100 வினாக்கள் கேட்டக்கப்பட்டது. கேள்விகள் இயற்பியல், வேதியில் , உயிரியில், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தது.
தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனை வருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும், அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப துளிர் அறிவியல் மாத இதழ் அல்லது ஜந்தர் மந்தர் ஆங்கில இருமாத இதழ் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல் 10 இடம் பிடிக்கும் மாணவர்களுக்க அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகளுடன் சந்திப்பு மற்றம் பாராட்டுக் கேடயம் வழங்கப்படும்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment