வேலூர் சாயி நாத புரம் ASR மஹாலில்
பன்னிரு திருமுறை மாநாடு
வேலூர் ,டிச 29-
வேலூர் மாவட்டம் சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் குழுமம் நடத்திய பன்னிரு திருமுறை மாநாடு வேலூர் சாயிநாதபுரம் ASR மஹாலில் நடைபெற்றது. தலைவர் சிவ வடிவேலு காந்தி செயலாளர் சிவ வேலன் பொருளாளர் சிவ ஜலகண்டீஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவபூஜை கோ பூஜை கொடியேற்றம் திருபள்ளி எழுச்சி கலை நிகழ்ச் சிகளும் பக்தர்களுக்கு தொடர் நித்திய அன்னதானமும் நடைபெற்றது சென்னை சிவலோக திருமடம் தவத்திரு வாதவூரடிகள் திருவாசக அருளுரையாற்றினார். இதில் திருவாசகம் முற்றோர்கள் குழுமத்தின ர்கள் சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment