பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்
வேலூர் ,டிச 18-
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவாணன் அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு நாள், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறை தீர்வு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக் களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் அளித்து வருகின்றனர். மேலும் வாரத்தில் அனைத்து வேலை நாட்களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இன்று 18.12.2024-ம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்வு நாளில் 39 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொண்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், (தலைமையகம்) அவர்கள் உடன் இருந்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment